காஞ்சிபுரம் தனியார் மருத்துவமனையில் ரசாயன வாயு கசிந்து விபத்து

    காஞ்சிபுரம் மதுராந்தகம் சன்னதி தெருவில் இருக்கும் மருத்துவமனை மற்றும் ரத்த பரிசோதனை மையத்தில், இன்று பிறப்பகலில் ரசாயன வாயு கசிவு ஏற்பட்டது. இதில் மருத்துவமனையில் இருந்த மருத்துவர்கள், நோயாளிகள் உள்பட 11 பேர் மயக்கமடைந்தனர். உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து 11 பேரும் மீட்கப்பட்டு மதராந்தகம் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். வாயுகசிவு குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.